அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு: செங்கோட்டையன்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதனைக் கூறினார்
மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்றும், ரூ.9 கோடி செலவில் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் அறிவித்தார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை நேரத்தை கண்காணித்து முறைப்படுத்தும் வகையில், பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்
மேலும், அரசுப் பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment