Title of the document

 ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி - பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ! 

50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது .சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பட்டி யலில் 50 வயதுக்கு மேற்பட்டோரை சேர்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத் தியுள்ளது . தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிர மாக மேற்கொண்டு வருகிறது . இதற்கிடையே வாக்குசாவடி கண்காணிப்பு உட்பட தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கள்தான் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர் . 

இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . இதையடுத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற் றும் அலுவலர்களின் பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதுதவிர ஏற்கனவே பட்டியல் சமர்ப்பித்த வர்கள் அதில் விடுபட்ட அல்லது சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை திருத்தம் செய்து அனுப்ப வேண்டும் . கரோனா தொற்று பரவ லால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது . 

அதேபோன்று ஆசிரியர்களின் புகைப்ப டம் , வாக்காளர் அடையாள அட்டை எண் உள் ளிட்ட தகவல்களை கட்டாயம் குறிப்பிட வேண் டும் . மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய கார ணங்கள் இன்றி தேர்தல் பணியில் இருந்து ஆசிரி யர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது . அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்க ளைச் சமர்ப்பிக்க வேண்டும் . அதை தலைமை யாசிரியர்கள் உறுதிசெய்து பட்டியலை இறுதி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்க ளில் துரிதமாக வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து விதமான பள் ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post