Title of the document
 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் , தருமபுரி -05

2020-2021 ஆம் கல்வி ஆண்டு கல்வி உதவித்தொகை பெண்கல்வி ஊக்குவிப்புத்தொகை தகுதிள்ள ஆதிதிராவிட மாணவிகளுக்கு வங்கி கணக்கு எண் துவங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் தொடர்பாக . 

பார்வை :

தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் கடித ந.க.எண் .19379 / 2017 / கொ 3 , நாள் .24.06.2020 .. பார்யிைற்காண் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் கடிதத்தின் படி 


2020-2021 - ஆம் கல்வி ஆண்டில் பெண்கல்வி ஊக்குவிப்புதொகை வழங்க தகுதியுள்ள ( 3 முதல் 8 ம் வகுப்பு வரை ) ஆதிதிராவிட மாணவிகளுக்கு வங்கி கணக்கு எண் துவக்கி , சார்ந்த மாணவிகளின் வங்கி கணக்கு எண் IFSC , MICR Code போன்ற விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தனிநபர் மூலம் தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . மேலும் வங்கி கணக்கு எண் துவங்கப்படாத மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத்தொகை வழங்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது . பள்ளி தலைமையாசிரியர்களால் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் படிவத்தின் ஒரு நகலை பெற்று அலுவலககோப்பில் வைக்கவும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது ,
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post