Title of the document
கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில், தனிமைப்படுத்தப்படுவோரை தங்க வைக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை, அடிப்படை வசதிகளுடன், தயாராக வைத்திருக்கும் படி, சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர்களான, சி.இ.ஓ.,க்களுக்கு, சென்னை மாவட்ட கலெக்டர், சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
தனிமை வார்டு 
சென்னையில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களுடன் தொடர்புடையோரை கண்டறிந்து, தனிமைப்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. அவர்களை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி வைக்க, போதிய இடமில்லை. எனவே, பள்ளி கட்டடங்களில், கொரோனா தனிமை வார்டுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post