Title of the document
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி பாதிக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் தெரிவித்தார் .

ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது :

10 - ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் மையங்கள் , கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது . தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.தேர்வு மையங்களை  கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

கரோனா தொற்று காரணமாக
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் , அந்தந்தப் பகுதியிலேயே தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்குவது குறித்து 18 - ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் அறிவிக்கப்படும் .

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஜக்டோ - ஜியோ அமைப்பினர் புறக்ககணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர் . அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்காது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post