ஆசிரியர் பயிற்சி மாணவர்களைச் செம்மையாக வழிநடத்தி, இனிய சாயல்கள்,
திடசிந்தனை, அர்ப்பணிப்புணர்வு, தன்னார்வம், நாட்டுப்பற்று, விளைவிருப்பம்
ஆகிய பண்புநலக் கூறுகளுடன் வளர்த்தாக்க வேண்டும்.
“தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு முதுகெலும்பு போன்றது. மனம் பணி நெடுகிலும் சோர்வடையாமல் இருக்க மருந்து போன்றது”.
இதமான செயல்பாட்டால் வகுப்பில் மாணாக்கர்களிடம் ஈடுபாட்டினை வளர்க்க
வேண்டும். ஒவ்வொரு மாணாக்கரையும் ஒரு உயரிய குறிக்கோள் அமைத்து வாழப்பழக்க
வேண்டும். வகுப்பறைகளில் அடிக்கடி உயர் குறிக்கோள்களை நினைவுப்படுத்தி அதனை
அடையும் வேட்கையை வளர்க்க வேண்டும். குறிக்கோளை அடையும் வேட்கையில்
நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மாணாக்கரிடம் வளருமாறு செய்ய வேண்டும்.
தொடர்ந்து புதியன கற்கும் ஆர்வமுடையவர் - ஆசிரியர்கள். படித்துப் பட்டம்
பெற்றவர்கள் என்றாலும் மாறிவரும் சூழ்நிலையில், பாடத்திட்டமும்,
கற்பிக்கும் முறையும் மாற்றங்கள் பெறுவதால், புதியனவற்றைக் கற்கும்
முயற்சியில் ஈடுபடவேண்டும். எத்தகைய கற்றல் சந்தர்ப்பத்தை எதிர்க் கொள்ளும்
பொழுதும், அறிவு, திறன், மனப்பாங்கு முதலியவற்றில் ஒருங்கிணைந்து
முழுமைத்திறன் அடையவேண்டும். கற்கும் ஆற்றல், வயது வளர்ச்சியுடன் வளர்ந்து
கொண்டே வருகிறது.
கற்றல் ஒருவரிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து கற்றல்
பேரளவில் விரும்பந்தக்க நடத்தை மாற்றங்களை ஒருவரிடையே ஏற்படுத்துகின்றது.
அந்த மாற்றம் நடத்தை மாற்றமாகவோ, சிந்தனை மாற்றமாகவோ இருக்கக் கூடும்.
கற்றல் வழியாக தற்புலக் காட்சி வளம் பெறும். அது புத்தாக்கத்தை
(Reorientation) ஏற்படுத்துகின்றது.
ஆசிரியர் - கற்பிக்கும் பொருள் பற்றிய தெளிந்த ஞானம் உடையவர் கல்வி என்பது
கொடுக்கப்பட்ட பாடப்பொருளில் தேர்ச்சி அடைவது மட்டுமல்ல. மாணாக்கர்களின்
வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு குறிப்பிட்ட
வாய்ப்புகளை பள்ளியில் அமைத்துத் தருவது கல்வியாகும்.
ஒரு நல்லாசிரியர் தொடர்ந்து கற்கும் பண்போடு அன்றாடம் தன்னைச் சுற்றி
நிகழும் நிகழ்வுகளை அறிந்து வைத்திருத்தலும் வேண்டும். கற்பிக்கும்
பொருளின் உட்கருத்து: நடைமுறையில் அதன் செயல் ஆக்கம்; பின்விளைவு
ஆகியவற்றைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். அவ்வாறு தொடர்புபடுத்திக்
கற்பிக்கும் போது மாணாக்கர்கள் கற்கும் பொருளின் உண்மையை எளிதில் அறிந்து
கொள்வார்கள்.
Post a Comment