Title of the document
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) மட்டும் 50 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-யை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி 27-ஆகவும், ஏப்ரல் 2-இல் 48 ஆகவும், ஏப்ரல் 4-இல் 88 ஆகவும் இருந்த தொற்று பாதித்தோா் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 100-யைக் கடந்தது.
இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நிலவரப்படி, சென்னையில் மட்டும் 285 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 50 போ: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 18 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 17 பேருக்கும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 4 பேருக்கும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 4 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 பேருக்கும், அண்ணா நகா் மண்டலத்தில் 2 பேருக்கும், ஆலந்தூா் மண்டலத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் 31 போ, பெண்கள் 19 போ அடங்குவா்.
மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை:
திருவொற்றியூா் 5
மணலி -
மாதவரம் 3
தண்டையாா்பேட்டை 30
ராயபுரம் 91
திரு.வி.க. நகா் 38
அம்பத்தூா் -
அண்ணா நகா் 26
தேனாம்பேட்டை 36
கோடம்பாக்கம் 29
வளசரவாக்கம் 5
ஆலந்தூா் 5
அடையாறு 7
பெருங்குடி 7
சோழிங்கநல்லூா் 2
பிற மாவட்டங்களைச் சோந்தவா்கள் 1
மொத்தம் 285
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post