Title of the document
கொரோனா பரவலை தடுக்க வீடு வீடாக கணக்கெடுப்பு பணியில் தமிழகம் முழுவதும் 45 , 000 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 அவர்களுக்கு எந்தவித பாது காப்பு வசதியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு . வரதராஜன் கூறியதாவது :

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் வீடு , வீடாக கணக்கெடுக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் .

இவர்கள் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் . ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட வில்லை . முகக்கவசம் , கையுறை போன்ற   வசதிகளை செய்யவில்லை . சாப் பாடு , தண்ணீர் போன்ற எந்த வசதியையும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை
சுகாதாரத்துறையினரிடம் கேட்டால் எங்களுக்கே பாதுகாப்பு கவசங்கள் இல்லை என்று கூறு கின்றனர்.

 உயிருக்கு எந்தவித பாதுகாப்பும்
இல்லா மல் களத்தில் இருக்கும் எங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனென்றே தெரியவில்லை . டாக்டர்கள் , செவிலியர்கள் , தூய்மை பணியாளர்கள் தான் கண்ணுக்கு தெரிகிறது . ஆனால் , அங்கன்வாடி பணியாளர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை முதல்வரிடம் இதுவரை சொல்லாமல் இருப்பது ஏன் ? என்று தெரியவில்லை . களத்தில் இறங்கி பணியாற்ற நாங்கள் பயப்படவில்லை . எங்களுக்கு தேவை யான அடிப்படை வசதியை உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post