Title of the document
20191210070058

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக் கான நீட் தேர்வு வரும் மே 3-ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத் தில் 1,17,502 பேர் உட்பட நாடு முழுவதும் 15,93,452 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர்,மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் என நாடுமுழுவதும் 154 நகரங் களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மார்ச் 27-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கலாம்என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.*.நீட் தேர்வு மே 3-ம் தேதியும், தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post