Title of the document
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQuXpXHb_pp2jUGy_IgqWlSZ-lJq2UwOYJ5Yp_WvT7K8ItWCwbB8w

 

இதுவா சுதந்திரம் 


பறக்கும் பறவையைக்
கூண்டில் அடைப்பதா சுதந்திரம்?!




வீசும் தென்றலை
விலைக் ொடுத்து வாங்குவதா சுதந்திரம்?!

மனிதனை மனிதன்
அழிப்பதா சுதந்திரம்?!

பணக்காரனுக்கு ஒரு நீதி
பாமரனுக்கு ஒரு நீதி
இதுவா சுதந்திரம்?!

மனிதர் உணர்வை
மதிக்கத் தெரியா மண்ணிலே
மாண்டு விட்டதடா சுதந்திரம்?!
மாண்டு விட்டதடா சுதந்திரம்?!

குருதியை வியர்வையாய் சிந்தி
சமமக்கள் சம ோடு வாழ,
தன் இன்னுயிரைத் துச்சமென எண்ணி
சாதித்து பெற்ற சுதந்திரம்
இன்று இல்லையே எம்தேசத்தில்?!

எங்கும் ஊழல்!
எதிலும் ஊழல்!
ஏழ்மையும், வறுமையும்?!
பசியும், துக்கமும்?!
வேலையில்லா திண்டாட்டமும்?!
வளங்கள் அழிவும்?!
விலை ோன கல்வியும்?!
விடைத் தெரியா மக்களும்?!

இதுவா அண்ணல் காந்தியடிகள்
காணத் துடித்த பாரதம்?!




அகிம்சை வழியைக் கையில் ஏந்தி
அமைதி ோராட்டம் நடத்தி,
வெள்ளையனை நாட்டை விட்டு துரத்தி,
பாரத மண்ணிலே
மூவர்ணக் ொடியை ஏத்தி,
வந்தே மாதரம்
என முழக்கமிட்டு!
மக்களை ஒன்றிணைத்து
வாழ வைத்த பாரதத்திலே?
இன்று ஒற்றுமையை இழந்து நிற்க?!

கண்கள் கலங்குதய்யா?
இதுதான் பாரதத்தின் பெருமையா?!

இதுவா சுதந்திரம்?! 
 ----------------------------------------------------------





மீண்டும் சுதந்திரம் பெறவேண்டும்!

மீண்டும் சுதந்திரம் பெறவேண்டும்!
மீட்டுக் கொடுப்பவர் வரவேண்டும்!
சொந்த நாட்டிலே அடிமைப் பட்டோம்!
சொந்தங்களே எமைஎதிர்க்கக் கண்டோம்!
இடித்திடும் முன்னரே மின்னல்வரும்! - சுதந்திரம்
கிடைத்த பின்னரா இன்னல் வரும்?
விடியும் முன்னரே பெற்றதனாலோ
விடியலை இன்னும் காணவில்லை!
அந்நியன் ஒருவன் எமைஆண்டான்!- அவனை
அகிம்சை ஆயுதம் வென்றதடா!
புண்ணிய பூமியின் மனிதர்களே! இன்று
புதிய தலைமை அடிமை கொண்டார்!
எண்ணியதில்லை இதுவரையில், எங்களை
எங்களால் அடிமை கொள்வோம்(மென) !
உண்மையைப் பொய்கள் உயிர்பறிக்கும்
உலகினில் சுதந்திரம் நிலைத்திடுமோ? - அப்
பொய்யரைத் தீயினில் புடம்போட - ஓர்
புதிய தலைமுறை வாராதோ?
சுயநலப் பேய்களை விரட்டுகின்ற
சுதந்திர போர்ப்படை வாராதோ?
ஊர்கள் முழுவதும் படைஅமைப்போம்!
ஊழலை எதிர்த்துப் படையெடுப்போம்!
வேண்டிய செல்வம் பெறுவதற்கே - பிறர்(க்கு)
வேதனை தருபவர் யாவருமே - சிறைக்
கூண்டினில் அடைபட வேண்டுமடா! -நம்
கொடுமைகள் பொடிபட வேண்டுமடா! 

 ----------------------------------------------------------






எது சுதந்திரம்

எது சுதந்திரம்?
போராடி போராடி உரிமையை பெறுவதா
காசு கொடுத்து கல்வியை பெறுவதா
மரத்தை வெட்டி நிழலை பெறுவதா
நிலத்தை விற்று உணவை பெறுவதா

எது சுதந்திரம்?
தைரியத்தை தொலைத்த பின்னும் வீரம் பேசுவதா
சாதியை வளர்த்த பின்னும் சமத்துவம் பேசுவதா
இறைத்தன்மையை இழந்த பின்னும் ஆண்மிகம் பேசுவதா
பழமைகளை அழித்த பின்னும் பாரம்பரியம் பேசுவதா

எது சுதந்திரம்?
சந்தோஷத்தை தொலைத்த பின்னும் நிம்மதியை தேடுவதா
மனிதர்களை இழந்த பின்னும் மனிதநேயம் தேடுவதா
உறவுகளை மறந்த பின்னும் பாசத்தை தேடுவதா
சுதந்திரத்தை பெற்ற பின்னும் சுதந்திரத்தை தேடுவதா

எது சுதந்திரம்? உரைப்பாய் மானிட.......

உரிமையை பெற உரிமை இல்லை
கல்வியை பெற கல்வி இல்லை
நிழல் பெற மரமும் இல்லை
உணவை பெற நிலமும் இல்லை

வீரம் பேச தைரியம் இல்லை
சமத்துவம் பேச தகுதி இல்லை
ஆண்மிகம் பேச இறைத்தன்மை இல்லை
பாரம்பரியம் பேச பழமை இல்லை

நிம்மதி தேட சந்தோசம் இல்லை
மனிதநேயம் தேட மனிதன் இல்லை
பாசத்தை தேட உறவுகள் இல்லை - கடைசியில்
சுதந்திரம் தேடும் சுதந்திரமும் இல்லை. 

 ----------------------------------------------------------




 சுதந்திர தினக் கவிதை | Suthanthira thina kavithai





அகரம் முதல் சிகரம் வரை
ஆயிரம் வாய்ப்புகள் உண்டு
உலகை அறிந்திடு
உழைப்பால் உயர்ந்திடு
உனக்கென ஓர் சரித்திரம் எழுதிடு!

உன் நெருங்கிய தோழனாய்
உழைப்பு இருக்கட்டும்!
நெருங்கவே முடியாத எதிரியாய்
சோம்பல் இருக்கட்டும்!

பலமுறை உன்னை
நீயே கேட்டு விடு
நான் ஏன் பிறந்தேன் என்று?

பல வெற்றி கண்ட பிறகு
ஒரு முறை சொல்லி விடு
சாதிக்கப் பிறந்தவன் நான் என்று !

இனியும் தாமதம் வேண்டாம்!
இறப்பதற்குள் சரித்திரம் படைப்போம்!
சுதந்திரம் வாங்கிய உறவுகளுக்கு
மன நிறைவோடு சமர்பிப்போம்!




 ----------------------------------------------------------

துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
திக்கு கால்
முளைத்து சாதி ஆனதோ
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?

சாதியா நம்
ஒருமைப்பாடு?
மதமா நம்
ஒற்றுமை?

உண்மை தான்
நம் பண்பு..!
உழைப்பு தான்
நம் தெம்பு..!
அன்பு ஒன்று தான்
நம் பிணைப்பு..!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
 ----------------------------------------------------------


விடியலை நோக்கி


நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.

 ----------------------------------------------------------





சூரியனுக்கு இரவில் சுதந்திரமில்லை
சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை
பளிச்சென்ற பகலிலும் பனிவிழும்
இரவிலும் முப்பொழுதிலும் எப்பொழுதிலும்
இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு !!!
ஆங்கிலேயனிடம் அடிமையானது அறியாமையினால்
வளமையை விட்டது புரியாமையினால்
மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல்
இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை
அழைத்து மரியாதை செய்து
வளம் பெருக்கி வானுலகம்
போற்ற வல்லரசாக்கி இந்தியாவை
இமயமெனத் தூக்கி நிறுத்துவோம்
பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம்
அனைவருக்கும் பயனுள்ளதாய் மாற்றுவோம் !!!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post