Title of the document

எஸ்பிஐ வங்கியில் 2,000 பேருக்கு வேலை! விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!!

*பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2 ஆயிரம் புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு கடந்த 2 ஆம் தேதி முதல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது*

*இதுவரை அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மறந்தவர்கள் விண்ணப்பிக்க இன்று திங்கள்கிழமை (ஏப் 22) கடைசி நாள்*

*பணி: Probationary Officer*

*காலியிடங்கள்: 2000*

*தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்*

*வயது வரம்பு: 01.04.2019 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு*

*தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்*

*விண்ணப்பிக்கும் முறை*

*https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்*

*விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் தகவல் அளிப்பு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும்*

*கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்*

*மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்*

*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.04.2019*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post