Title of the document
புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 1,822 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர், இ.பி.எஸ்., வழங்கினார்.தமிழகத்தில், 2015 - 16; 2016 - 17 மற்றும் 2017 - 18ல், 1,822 வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலியாகின. அவற்றை நிரப்புவதற்காக, 2018ல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தேர்வு நடத்தப்பட்டது.தேர்வில், 1,822 கிராம நிர்வாக அலுவலர்கள், தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இதன் துவக்கமாக, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம், தலைமை செயலகத்தில், 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.அத்துடன், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில், 1.96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, குறுவட்ட அலுவலர்களுக்கான, குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டடங்களை, முதல்வர், இ.பி.எஸ்., 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆணை வழங்கினார் முதல்வர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم