Title of the document
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடங்களும் அதிகரிக்க மருத்துவ கவுன்சிலிடம் அரசு முறையிட்டு உள்ளது. 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கூடுதலாக இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளதால், 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கி உள்ளதால் அங்கு 100 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 2,900 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன. இதுதவிர கூடுதலாக 345 இடங்கள் கிடைக்கும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post