Title of the document
* பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு

* பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு

* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்க ரூ.2,791 கோடி ஒதுக்கீடு

* முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5000 தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.1,552 கோடி ரூபாய் நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2018-19ம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்த ஓ.பன்னீர்செலவம், 2019-20ம் ஆண்டில் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post