Title of the document

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத அரசுத் தேர்வுத் துறையின் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் திங்கள்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post