Title of the document
தலைமை செயலக ஊழியர்கள், இன்று வேலைக்கு வராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து துறை செயலர்களுக்கும், கிரிஜா அனுப்பியுள்ள கடிதம்:இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சம்பளம் வழங்க கூடாது. பகுதி நேர ஊழியர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பணி நீக்கம் செய்ய வேண்டும். இன்று, அரசு ஊழியர்கள் யாருக்கும், தற்செயல் விடுப்பு வழங்கக் கூடாது.அனைத்து துறை தலைவர்களும், தங்களுடைய துறையில் உள்ள மொத்த ஊழியர்கள்; வேலைக்கு வந்தவர்கள்; வராதவர்கள்; ஏற்கனவே விடுப்பு கேட்டிருந்தவர்கள் விபரத்தை, இன்று காலை, 10:30 மணிக்குள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post