Title of the document

மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.மழை பெய்தால் உடனே பள்ளிக்கு விடுமுறை விடக்கூடாது என்று தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் , மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கூறினார். மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக புதிய விதிகளை அமல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை விடுத்துள்ளார். 

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். விடுமுறை காரணமாக பாடத்திட்டங்கள் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.


விடுமுறை விடப்பட்டால் அதை சரி செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த வேண்டும். திருவிழா போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை விடும்போது அதற்கு ஈடுசெய்யும் பணிநாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும். மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழையைப் பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விடுப்பு அறிவிக்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post