அதே நேரத்தில், தமிழ் மொழி வழியில் முதல் குரூப் படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் புத்தகங்களும், ஆங்கில மொழி வழியில் மூன்றாம் குரூப் படிக்கும் மாணவர்களுக்கு வரலாறு புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘காலாண்டு தேர்வு முடிந்து ஒரு மாதமான நிலையில், ஆங்கில மொழி வழியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் இரண்டாம் தொகுதி புத்தகங்களும், தமிழ் மொழி வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, இரண்டாம் தொகுதி வரலாற்று புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பாடங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, அதனை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். பள்ளிக்கல்வித்துறையில் கேட்டால் புத்தகங்களை அச்சடிக்கிறோம். விரைவில் விநியோகம் செய்யப்படும் என்கின்றனர். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விரைவில் புத்தகங்களை விநியோகம் செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
Post a Comment