ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் 'கால் முளைத்த கதைகள்' சிறுகதை தொகுப்பு இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பாடத்திட்ட வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜோ.அலெக்ஸ் கிறிஸ்டோபர் கூறியதாவது: ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மொழி, இயற்கை, பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், கலை அழகியல், நாடு, சமூகம், அரசு நிர்வாகம், சிந்தனை, மனிதம் போன்றவை குறித்து பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் செய்யுளில் எஸ்.ராமகிருஷ்ணனின் 'கால்முளைத்த கதைகள்' பண்பாட்டு சிறுகதை தொகுப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அதை படித்து, தானாக கடிதம் எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் சுயசார்பு சிந்தனை மேலோங்கும், என்றார்.