உத்தரப்பிரதேசத்தில் வெளியிடப்பட்ட 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் நடந்த பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் கும்பலாக காப்பி அடித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், தேர்வு முறையாக நடைபெற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன் எதிரொலியாக 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 98 பள்ளிகளிலும், 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 52 பள்ளிகளிலும் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இது, அம்மாநில கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق