Title of the document


பத்தாம் வகுப்பு தகுதியாக கொண்டு இந்த தேர்வு எழுதப்படுகிறது.

ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் பட்டதாரிகள், பொறியியல் பட்டம் பெற்றவர்களும் என லட்சக்கணக்கில் உள்ளனர். ஏன் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

காரணம் திட்டமிட்டு படிக்காதது. தேர்வு குறித்தும் அதன் பாடத்திட்டம் குறித்தும், தகுந்த வழிகாட்டுதல் உடன் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம். 12 மணி நேரம் தொடர்ந்து படிப்பது முக்கியம் கிடையாது. எந்த பாடத்தை எப்படி படிப்பது என்பது தான் புத்திசாலிதனம்.

ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட புத்தகங்கள் கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். இதில் இருந்து தான் வினாக்கள் வரும்.

பொது அறிவு பிரிவில் 100 வினாக்களும், பொது தமிழில் 100 கேள்விகளும் இருக்கும். முதல் பிரிவில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25  வினாக்களும் இருக்கும்.

பொது அறிவு அனைவரும் படிப்பர். எனவே "கட் ஆப்' மார்க்கில் உயர்ந்த இடத்தை பிடிக்க, திறனறி தேர்வு, நடப்பு கால நிகழ்ச்சி, பொது தமிழ் இவைகளில் கவனம் செலுத்தி படித்து அதிக பட்ச மதிப்பெண் பெற்றால் அரசு வேலை உறுதி.

பொருத்துக, இணை தேர்வு, பொருந்தாது என சிக்கலான வினாக்கள் இருக்கும். எனவே இவற்றை கவனமுடன் படித்து, சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்.

நாளிதழ்: புத்தகத்தில் இல்லாத கேள்விகள் நடப்பு கால நிகழ்வாக 15 வினாக்கள் கேட்கப்படும். இதற்கு நாளிதழ் படிப்பது அவசியம். மத்திய அமைச்சர்கள், உலக நிகழ்வுகள், விருதுகள், கண்டுபிடிப்புகள், விளையாட்டில் சாதனையாளர்கள் நடந்த இடம், நடைபெற உள்ள இடம். உலக தலைவர்களின் பெயர்கள், அவர்கள் வகிக்கும் பதவிகள் என அனைத்தையும் குறித்து வைத்து படிக்கவேண்டும். கடந்த ஒரு ஆண்டு நடந்த நிகழ்வுகளை குறித்து வைத்து ஞாபகப்படுத்துவது நல்லது.

வரலாற்று பாடத்தில் கால சுவடு அமைத்து படிக்கவேண்டும். கற்காலம் முதல் சுதந்திரம் பெற்றது வரை முக்கிய ஆண்டுகளை வரிசை படுத்தி அந்த சம்பவங்களை குறித்து வைத்து படிக்க வேண்டும். போர்கள் நடந்த ஆண்டு, யாருக்கு வெற்றி, அதில் ஏற்பட்ட ஒப்பந்தம் என வரிசை படுத்தி படிக்கவேண்டும்.

அறிவியல் பாடம்: 20 முதல் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. இயற்பியல் பாடம் படிக்கும் போது 6 ம் வகுப்பில் காந்தவியல் பகுதி படித்தால், தொடர்ந்து ஏழாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பு என பத்தாம் வகுப்பு வரை உள்ள காந்தவியலை படித்து குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது போல் ஒவ்வொரு பாடத்தையும் ஒரு வகையில் படிக்க வேண்டும்.

உயிரியல் பாடத்தில் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், விட்டமின்கள் போன்றவற்றை கண்டிப்பாக படித்து குறிப்பெடுக்க வேண்டும்.

நாள்தோறும் படிப்பை துவங்குவதற்கு முன்னதாக படித்ததை நினைவுபடுத்தி படித்த பின்பு தான், புதிய பாடத்தை படிக்க துவங்க வேண்டும். பாடதிட்டத்தை தேர்வு செய்து, தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு பாட புத்தகத்தை தெளிவாக படித்தால் அரசு வேலை உறுதி

வாழ்த்துகளுடன்..

                   kalvinews

           
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
أحدث أقدم