Title of the document
பொன்னமராவதி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என்று விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூர் ஊராட்சி இல்லணிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இதனால் இந்த பள்ளி மூடப்படுமோ என்ற சந்தேகத்தில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களின் பெயரில் ரூ.1,000 டெபாசிட் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியர் ஆதிராஜாவின் முயற்சியில் இப்போது இந்த பள்ளியில் 10 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று விளம்பர பதாகை வைத்துள்ளனர். போஸ்டர் ஒட்டி விளம்பரம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post