Title of the document


பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வை போலவே தற்போது முதுநிலை ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது.
இதில் இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் தேர்ச்சி பெறாத சில நபர்கள் பெயர்கள் கூடுதல் மதிப்பெண்களுடன் இடம்பெற்றதே சர்ச்சைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகுறிப்புகளில் தவறு இருப்பதை சுட்டிக்காட்டி சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post