Title of the document

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவி யருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இலவச சைக்கிள், உதிரி பாகங்களாக, லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இவற்றை அந்தந்த பள்ளிகளில், சைக்கிளாக தயார் செய்யும் பணிகள் நடக்கின்றன. தற்போது, அரையாண்டு தேர்வு நடந்து வருவதால், சைக்கிள் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு முடிந்து, ஜனவரியில் பள்ளிகள் திறந்த பிறகு, இலவச சைக்கிள் வினியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post