Title of the document

புதிய தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதன் இன்று பிற்பகல் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவை இடைநீக்கம் செய்ததையடுத்து புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பிற்பகல் பதிவு ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித் துறையினர், சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணத்தையும் கட்டிக் கட்டியாக தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். சேகர் ரெட்டியிடம் இவ்வளவு மொத்தமாக பணம் இருப்பதில் பல்வேறு உயர் அதிகாரிகள் சம்பந்தம் இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடத்தியதில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் சிக்கினார்.

இதனையடுத்து, அவரை இன்று இடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இன்று பிற்பகல் கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முறைப்படி பொறுப்பேற்ற பின்னர், கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளர் பணியை தொடங்குவார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post