Title of the document
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5H7XaYTTKT8swXlPWyWON5M4RveFTw9Q8psNM2v5SeFcYP_xJETheXQy__nuJKvuow83h-HKyZIn7-0punsNPtlCE_3eIIRsqRI8jp6N2EqfSVoGgDtcWG_fVRH_qlKkclAjyQhOfw0s/s1600/20161120165925.jpg
  வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் 3 பங்கு அதாவது 75 சதவீதம் வெவ்வேறு பாடமாகப் பயின்றவர்களுக்கும், 1 பங்கு அதாவது 25 சதவீதம் ஒரே பாடமாகப் பயின்றவர்களுக்கும் விகிதாச்சாரம் வழங்கப்பட்டு வருவதால் வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்கள் நீண்ட நாட்களாகப் பதவி உயர்வு கிடைக்கப் பெறாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கருதி

  வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் ஒரே பாடமாகப் பயின்றுள்ள வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே அதிக அளவில் விகிதாச்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கு உண்டான தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான வரலாறு முதுகலை ஆசிரியர் பாட பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்தக் கூடாது எனவும்,

தருமபுரி மாவட்டம் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் (வரலாறு) பணியாற்றும் திரு.ப.நடராசன் அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதிமன்றத் தடை ஆணையின் காரணமாகவே இந்த கல்வியாண்டு (2016-2017) வரலாறு பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 சென்னை உயர்நீதிமன்ற தடை ஆணை (நாள்: 26.05.2016)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post