தமிழக காவல்துறையின் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனுக்கு கூடுதல் பொறுப்பு
தமிழக காவல்துறை இயக்குநராக இருந்த ராமானுஜம் கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து இந்த பதவிக்கு உளவுத்துறை டிஜிபியாக இருந்த அசோக்குமார் நியமிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு இவரது பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஓராண்டு பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டது. நவம்பர் 4ஆம் தேதி வரை இந்த பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில், விருப்ப ஓய்வு பெறுவதாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து அசோக்குமார் விடுவிக்கப்பட்டார்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலில் சீனியராக உள்ளவர்கள்தான் இந்தப் பதவியில் நியமிப்பது வழக்கம்.
ஆனால் திடீரென அசோக்குமார் பதவி விலகியதால் கூடுதலாக உளவுத்துறை டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை இயக்குநராக இருந்த ராமானுஜம் கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து இந்த பதவிக்கு உளவுத்துறை டிஜிபியாக இருந்த அசோக்குமார் நியமிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு இவரது பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஓராண்டு பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டது. நவம்பர் 4ஆம் தேதி வரை இந்த பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில், விருப்ப ஓய்வு பெறுவதாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து அசோக்குமார் விடுவிக்கப்பட்டார்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலில் சீனியராக உள்ளவர்கள்தான் இந்தப் பதவியில் நியமிப்பது வழக்கம்.
ஆனால் திடீரென அசோக்குமார் பதவி விலகியதால் கூடுதலாக உளவுத்துறை டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment