Title of the document


சென்னை: டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான கட்டணத்தை செப்.,16-ம் தேதி செலுத்தலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டிஎன்பிஎஸ்சி இணையதளம் இன்று காலை தாற்காலிமாக முடங்கியதை அடுத்து காலஅவகாசம் நீட்டிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விண்ணப்பதாரர்களின் கோரிக்கை அடிப்படையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்குமேல் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படாது என டிஎன்பிஎஸ்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 5,451 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 4 தேர்வுக்கு ஏற்கனவே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post