Title of the document

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பயணிக்க
அனுமதி அளிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேலும், கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டையே போதுமானது எனவும்,புதிய பயண அட்டை வழங்கு வரை, இந்த நடைமுறையை பின்பற்றுமாறு ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1.50 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட் கார்டு வடிவில் 1,791 பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த 3.10 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post