Title of the document
மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும், 2,500 இடங்கள் உள்ளன.இந்த இடங்களில், தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும், நீட் தேர்வில் தகுதி பெற்ற, எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2019 - 20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும், சென்னை, கோவை உள்ளிட்ட, 148 நகரங்களில், ஜன., 6ல் நடந்தது.இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் எழுதினர். தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள், www.natboard.edu.in என்ற, தேசிய தேர்வுகள் வாரிய இணையதளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post