Title of the document

குரூப் - 1' தேர்வு டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்பு.

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட, எட்டு பதவிகளில் உள்ள, 139 காலியிடங்களுக் கான, 'குரூப் - 1' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் - 1 பதவியில், 139 காலியிடங்களை நிரப்ப, மார்ச், 3ல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

துணை கலெக்டர், 27; டி.எஸ்.பி., 56; வணிக வரி உதவி கமிஷனர், 11; கூட்டுறவு துணை பதிவாளர், 13, மாவட்ட பதிவாளர், 7; ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர், 15; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, 8 மற்றும் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி, 2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post