Title of the document


முதல் திருப்புதல் தேர்வு, போகி பண்டிகையன்று நடத்துவதால், சொந்தஊருக்கு குடும்பத்தோடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. இரு மாத கால இடைவெளியே இருப்பதால், திருப்புதல் தேர்வுக்கு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், முதல் திருப்புதல் தேர்வு, வரும் 5ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கு இடையில், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போகி பண்டிகையாக கருதப்படும் வரும் 14ம் தேதி தேர்வு நடக்கிறது. பெற்றோர், ஆசிரியர்கள் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post