Title of the document

தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் பாடநூல் கழகம் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டது. இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ரூ.50 கோடிக்கு மேல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் போது அதற்கான உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த கணினி ஆய்வக விவகாரத்தில் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை விதிகளுக்குப் புறம்பாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் இந்திய வர்த்தக இதழில் இதுதொடர்பான அறிவிப்பாணையை வெளியிடவில்லை. இதற்கான தனி குழுவும் நியமிக்கப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் பாடநூல் கழகம் ஆகியோர் வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post