கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வை தள்ளிவைப்பதில் துறை ரீதியாக சிரமம் உள்ளது, இருந்தாலும் தேர்வை தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தினால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டிகள் வழங்குவதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment