தீபாவளி நன்னாளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். விபத்து இல்லாமல் பட்டாசு வெடித்து, மகிழ்ச்சி நிறைந்த தீபாவளியை கொண்டாட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்கக்கூடாது. மூடிய பெட்டிகளில், பாட்டில்களில் பட்டாசுகளை வைத்து வெடிக்கக்கூடாது. கூட்டமான பகுதிகள், குறுகிய தெருக்களில் வெடிக்கக்கூடாது. குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர் பாதுகாப்பில் வெடிக்க வேண்டும். நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை அருகில் வெடிக்கக் கூடாது.மேலும், விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்க வேண்டும். தீ பாதுகாப்பு குறித்தும் அதிலிருந்து தப்பிப்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment