Title of the document



பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

குற்றச்சாட்டை சுட்டிக் காட்டி னால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் கூறிய போது தேர்வர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தையாக கருதினார்கள் ஆனால் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான குளறுபடிகள் குறித்து செய்தி ஊடகங்களிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கானதேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாறித்து வெளியிட்ட உத்தேச பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதுவும் குறிப்பாக ஓவிய ஆசிரியர்பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் free hand out line model drawing highergreade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என்று முறைகேடாக தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ்வழி சான்றிதழ் பெற்று தகுதி யற்ற நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு 1325 பணி இடங்கள் முழுமையாக பட்டியல் வெளியீடு செய்யாமல் தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் இருக்கும் நிலையில் RESERVED என்று நிரப்பாமல் நிறத்தியுள்ளது.போன்ற பல்வேறு குளறுபடி நிலவிவரும் நிலையில் இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒன்றுமே தெரியாதவர் போல் பேட்டி அளித்துள்ளார் என்பதை நினைக்கும் போது தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியமே தமிழ் வழி சான்றிதழில் குழப்பத்தில் உள்ளதை ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்து பதிலளிக்க தேர்வு வாரியம் கூடி முடிவு எடுக்கும் என்று சொல்லும்போது ஒரு பொறுப்புள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் இவ்வாறு எந்த குளறுபடியும் இல்லைஎன்று கூறுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று நிருபிக்கும் பட்சத்தில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் கருத்தாகும்.ஆகவே சிரப்பாசிரியர் நியமனத்தில் சற்று அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்து பார்த்து பள்ளி கல்வி அமைச்சர் என்ற முறையில் ஆரம்பம் முதல் இன்று வரையிலும் உத்தேச பட்டியல் வெளியீடு செய்து வெளியிட்டது வரை ஆசிரியர் தேர்வுவாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் என்னென்ன விதிமுறைகள் சொல்லப்படுகிறது.

எப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் தன்டிக்கப்பட வேண்டிய வர்களே.என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சிரப்பாசிரியர் நியமனம் பொருத்தவரை சரியான தீர்வு எடுப்பார் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு செய்தி ஆகவே ஏற்கனவே தாங்கள் கூறிய போது ஆய்வக உதவியாளர் பணி போல் சற்று தாமதமாக ஆனாலும் யாரும் பாதிக்கப்படாமல் முறையாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளதை நினைவுகூர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்ததேர்வர் களின் கருத்தாகும்.தாங்கள் கூறியுள்ளது முன்னால் ராணுவத்தினர் விதவைகள் இட ஒதுக்கீடு கோருவர்கள் போன்றவைகள் மிகவும் அரிதாகவே உள்ளது அது முக்கிய பிரச்சினையாக ஒன்று இரண்டு இருந்தாலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் சுட்டிக் காட்டப்படாத ஓவிய ஆசிரியர் பணிக்கு தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினை பிரதானமாக இரண்டு மாத காலம் வரை தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது.ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது இது வரையில் எந்தவொரு பதிலும் இல்லை.பள்ளிகல்வி அமைச்சராக இருக்கும் தங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலை இதுவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.இது சரியல்ல தகுந்தமுறையில் தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

மேலும் ஒன்றுமே தவறு இல்லை இந்நிலையில் ஓய்வு பெற்ற அலுவளர் ஒருவரது குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளது.இதையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும். இந்த பதிவு தகுதிவாய்ந்த தேர்வர்கள் இணைந்து பதிவு செய்து வெளியிட்டது.உரிய பதில் அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்த வர்களின் பணிவான வேண்டுகோள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post