Title of the document


உடுமலை : உடுமலை, கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி இணைந்து மாணவர்களுக்கான மாதிரி 'நீட்', பயிற்சி தேர்வை கோவையில் டிச., 2ம்தேதி நடத்துகிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வாக 'நீட்', தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஒவ்வொரு வட்டாரத்திலும், குறிப்பிட்ட பள்ளிகள் மையமாக தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.உடுமலை, பொள்ளாச்சி, கோவை சுற்றுப்பகுதி மாணவர்களுக்காக, ஆன்-லைன் முறையில் மாதிரி 'நீட்', தேர்வு நடத்த, கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் இந்துஸ்தான் அறிவியல் கல்லுாரி ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், டிச., 2ம் தேதி காலை, 10:00 மணி முதல் 1:00 மணி வரை மற்றும் மதியம் 2:00 முதல் 5:00 மணி வரையும், 720 மதிப்பெண்களுக்கு நடக்கிறது.ஆன்-லைனில் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post