Title of the document


அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளி கல்வி துறை வரும், 15ம் தேதி ஆலோசனை நடத்துகிறது.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வி அமைச்சர்செங்கோட்டையன் உத்தரவிட்டார். இது தொடர்பாக, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், 15.30 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கை அளித்தார். இதையேற்று, இத்திட்டத்தை செயல்படுத்த, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துஉள்ளார்.இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும், 3,688 உயர்நிலை மற்றும், 4,040 மேல்நிலை பள்ளிகளில், ஜனவரிக்குள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில், முதல் கட்டமாக, 1.63 லட்சம் ஆசிரியர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, மின்னணு பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்படும்.இது தொடர்பாக, வரும், 15ம் தேதி, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், ஆலோசனை கூட்டத்தை அறிவித்துள்ளார். இதில், மாவட்ட வாரியாக, பள்ளி கல்வி அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் தெரிந்த ஆசிரியர்கள் அல்லது பணியாளர்கள், வீடியோ கான்பரன்சில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post