Title of the document


நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சக்திவேல் வாங்கும் விழாவையொட்டி,
நாகை மற்றும் திருமருகல் வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நவ. 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் திருக்கோயில் வேல் வாங்கும் விழா நவ. 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, நாகை வட்டத்தில், நாகை மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நவ. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த விடுமுறை, டிச. 1-ஆம் தேதியைப் பணி நாளாகக் கொண்டு ஈடுசெய்யப்படும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post