விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நுார் சாகிபுரம் காளியம்மன் கோயிலைச் சேர்ந்தவர், நடராஜன். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக, தென் ஆப்பிரிக்காவில் பணி புரிந்து வருகிறார். இவரது மகன் பெயர் விக்னேஷ் (வயது 17).
தாய் சுஜாதாவுடன் வசித்து வந்தார். விக்னேஷ் 10 ஆம் வகுப்பு வரை, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். தற்போது, ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆங்கிலத்தில் பிளஸ் டூ படித்து வந்தார்.
ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை, மலையாள மொழியில் படித்துள்ளார். தற்போது, ஆங்கிலத்தில், சி.பி.எஸ்.சி. சிலபசில் படிக்க மிகவும் சிரமப் பட்டுள்ளார். இது தனக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது, என்று தன் தாயாரிடம் கூறி உள்ளார், விக்னேஷ்.
இந்த மொழிப் பிரச்சினையால், நன்றாகப் படிக்கக் கூடிய இந்த மாணவர், கடந்த வாரம் பள்ளியில் நடந்த தேர்வினை சரியாக எழுத முடியாமல் சிரமப் பட்டுள்ளார்.
இதனால், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். பக்கத்தில் நடந்த திருவிழாவைக் காண தாய் சுஜாதா வெளியே போயிருந்தார். அப்போது, விக்னேஷ், வீட்டில் துாக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
துவக்கத்திலேயே, அந்த மாணவர் சொல்வதைக் கேட்டு, அவர் பெற்றோர் நடந்திருந்தால், இந்த உயிர் இழப்பு ஏற்பட்டிருக்காது, என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
Post a Comment