Title of the document

இளைய தலைமுறையினர் அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்து கொண்டு சாதனை புரிய வேண்டும் என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார்.
       
ஓசூரில் இஸ்ரோ சார்பில் நடைபெற்ற, விண்வெளி வாரவிழாவை ஒட்டி, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியில்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக  விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட ஆட்சியர் பிரபாகர், இந்திய விண்வெளித் துறை  விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில், இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேச்சு போட்டிகள், ஒவியப்போட்டிகள், உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மாணவர்கள் அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்து கொண்டு, சிறந்த மனிதராக வர வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post