Title of the document

சென்னை மாதவரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பால்வளத்துறை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 11 மஸ்தூர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பதவி: கால அளவு மஸ்தூர்
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடினமான பணிகளை செய்யும் வகையில் உடல் திறன் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாது. 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு சென்னை மாதவரத்தில் உள்ள பால்பண்ணை அலுவலகத்தில் நடைபெறும். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnddd.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மாதவரம், பால்பண்ணை. சென்னை - 51
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnddd.in/2018%20TSM%20application%2010.10.18என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2018
 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post