Title of the document

மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆய்வு செய்யப்பட்டன.முதற்கட்டமாக பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக 6 - 9ம் வகுப்புகளில் ஆசிரியர் திருத்திய விடைத்தாள்கள் நேற்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தலைமை வகித்தார். 304 பள்ளிகளில் இருந்து பாடங்கள் வாரியாக கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள் ஆய்வு செய்யப்பட்டன. 'தவறு மற்றும் மதிப்பெண் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post