``எங்கள் பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நண்பர்களிடம் உதவிக் கேட்கும் சூழல் வரும்போது, முதல் பங்களிப்பாக என்னுடைய தொகையாகத்தான் இருக்கும். குறைந்தது 10,000 ரூபாயாவது அளிப்பேன். சீருடை கொடுத்தது பற்றிச் சொன்னேன் அல்லவா! அதேபோல, மாணவர்களுக்குக் குடிநீர்த் தேவைக்காக, 100 அடிக்கும் அதிகமாகக் குழாய் இறக்கி 2,000 லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர்த் தொட்டி கட்டினோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த வசதி தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்றால், பெற்றோர்கள் விரும்பும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்க வேண்டும். அதற்கான ஸ்பான்ஸர்ஷிப் பிடித்து அவற்றையும் உருவாக்கினோம். மாணவர் சேர்க்கை காலத்தில், அருகிலுள்ள 22 கிராமங்களில் சுவர் விளம்பரங்கள் செய்து மாணவர்களை ஈர்த்தோம். இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொண்டே செல்லலாம்" என்றவரிடம் சமீபத்தில் கிடைத்த விருது பற்றிக் கேட்டேன்.
``கோயம்புத்தூரில், தலைமை ஆசிரியராக சிறப்பாகப் பணிபுரிந்த ஜெகன்நாதன். அவரின் பெயரால் வழங்கப்படும் விருதை, சமீபத்தில் எனக்கு அளித்தார்கள். பொதுவாக விருது, பாராட்டு என்றால் நான் சற்று ஒதுங்கிக்கொள்வேன். அது என்னுடைய இயல்பு. ஆனால், இந்த விருதை நான் பெற்றுக்கொள்வதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, 15 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் அலசி ஆராய்ந்து, விருதுக்கு இருவரைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதில் நானும் ஒருவன். அடுத்த காரணம், விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கவிருப்பது. அந்தப் பணத்தை என் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ள என்பது என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்
Post a Comment