இரண்டாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது. இதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய, நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 1,730 பள்ளிகள் உள்ளன. இதில், 1,004 துவக்க பள்ளிகள் அடங்கும். சி.பி.எஸ்.இ., வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பழங்குடியினர் பள்ளி, சமூக நலத்துறை பள்ளி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளி களுக்கும் நீதிமன்ற உத்தரவை மேற்?காள் காட்டி சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகளில் வீட்டு பாடம் கொடுக்கும் முறை உள்ளது. பெரும்பாலும் அரசு பள்ளிகளில் தருவதில்லை. இது தொடர்பாக, அரசு ஏற்கனவே நடைமுறை வகுத்துள்ளது. அந்த நடைமுறையை கடைபிடிக்க அறிவுறுத்தி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்
Post a Comment