Title of the document

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசில் ஆசிரியர் பணி!  

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றினை நிரப்பும் வகையில் முதற்கட்டமாக 1,474 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆறு மாதத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களுக்கு அடிப்படை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், தாவரவியல், வேதியியல், வரலாறு வணிகவியல், விலங்கியல், பொருளியல் உட்பட 11 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது குறித்து மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் அருகில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post