Title of the document
கோவை;ஓய்வூதியதாரர்களின் குறைதீர்ப்பு நாள் கூட்டம், அக்.,15ல் நடக்கிறது. இதில் ஓய்வூதியதாரர்கள் பங்கேற்று பயனடையலாம்.இது குறித்து, கலெக்டர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம், அடுத்த மாதம், 15ம் தேதி பகல், 2:30 மணிக்கு, மாவட்ட கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் ஓய்வூதியதாரர்கள் பங்கேற்று பயனடையலாம். மாவட்டத்தில், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் இதுநாள் வரை கிடைக்கப் பெறாமல் இருந்தால், இது குறித்து தங்களது குறைகளை, கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு (கணக்கு) அக்.,3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


அதில் பி.பி.ஓ.,எண்., முகவரி, ஓய்வு பெற்ற நாள், கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை, குறைகள் விபரம் ஆகியவற்றை தனித்தாளில் எழுதி, அது தொடர்பான வழக்கு இருந்தால், அதுபற்றி குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post