தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வின்போது, பாதுகாப்புக்காகப் பெண்களின் தாலியை கழற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ( TSPSC) சார்பில், கிராம வருவாய் அதிகாரி தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. 700 காலியிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 2,000 மையங்களில் நேற்று அமைதியான முறையில் தேர்வு நடைபெற்றது. ஆனால், தெலங்கானா மாநிலம் நார்சபூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வெழுத வந்த திருமணமான பெண்களிடம், தங்களின் தாலியைக் கழற்றினால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Post a Comment