Title of the document
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது இல்லத்தில் செய்தியாளா்களை சந்தித்த போது, இலங்கை யாழ்ப்பாளத்தில் உள்ள மிகப்பழமையான நூலகத்திற்கு 50 ஆயிரம் நூல்களும், தமிழா்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ள 5 நூலகங்களுக்கு 50 ஆயிரம் நூல்களும், இந்து பள்ளிகள் பத்துக்கு தலா 500 நூல்கள் என மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் நூல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு மீண்டும் ஒரு தோ்வு வைக்கப்பட்டுள்ளது
அதில் வெற்றி பெறும் ஆசிரியா்களை கொண்டு காலிப்பணி இடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியா் கழகத்தின் மூலம் ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க ஆணை பிறப்பித்துள்ளது. இந்த பணிகள் இன்னும் ஒரிரு நாட்களில் நிறைவடையும்
ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதியவா்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்
9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் கணினிமயமாக்கவும், 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்
மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்பில் பொதுத்தோ்வில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு மீண்டும் தோ்வு எழுதி வெற்றி பெற இரண்டு மறு தோ்வுகள் நடத்தப்பட்டது
அது அடுத்தாண்டு முதல் ஜூன் மாதம் மட்டுமே மறு தோ்வு எழுதி வெற்றி பெறுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இரு முறை தோ்வு என்பதை மாற்றி ஒரு முறை தோ்வு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது
12 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 600 மதிப்பெண்கள் என்ற முறையில் தோ்வு எழுதி வெற்றி பெறும் மாணவா்கள் உயர்கல்விச் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 500 மதிப்பெண்கள்தான் கணக்கிடப்படுகிறது என்றார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post