Title of the document
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், 'தூய்மையே சேவை' விழிப்புணர்வு ரதத்தை, கலெக்டர் மலர்விழி துவக்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகள் தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த, 2014ல், அக்., 2ல், துவங்கப்பட்ட திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில், பொது இடங்களை தூய்மைபடுத்துதல், அரசு கட்டடங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுற்றுலா தலங்கள், கோவில்கள், வணிக வளாகங்கள், பஸ் ஸ்டாண்ட், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற, பல்வேறு இடங்களை, தூய்மைப் படுத்தும் பணிகள், மேற்கொள்ளப்பட உள்ளன. பேரணியை, நேற்று கலெக்டர் மலர்விழி துவக்கி வைத்தார். தூய்மைக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி திட்ட அலுவலர் ராஜமாணிக்கம், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உட்பட, பலர் பங்கேற்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post